
Super User
ஐபிஎல் : மீண்டும் கெய்ல் - வென்றது பஞ்சாப்
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8-வது ஓவரில் எளிதாக 96 ரன்களை கடந்தது.
37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.
சென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரளி விஜய் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.
அவர்களை தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் ஒன்றிரண்டாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய தோனி அரை சதமடித்தார். அடுத்து பிராவோ இறங்கினார். தோனி தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் இறுதி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வி அடைந்தது. தோனி 44 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் : சஞ்சு சாம்சன் அதகளம் - பெங்களூரு தோல்வி
ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 92 ரன்கள் அடித்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.
அடுத்து குயின்டான் டி காக் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 26 பந்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 30 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ங்களூர் அணி 10.2 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது.
விராட் கோலி அவுட்டானதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெஹி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 6-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.
16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், மந்தீப் சிங் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்கள்.
கடைசி மூன்று ஓவரில் பெங்களூர் அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை லாக்லின் வீசினார். இதில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடிக்க பெங்களூர் அணிக்கு 13 ரன்கள் சேர்த்தது.
கடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார் வாஷிங்டன் சுந்தர். 5-வது பந்தில் க்ளீன் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். கடைசி பந்தில் இவர் ரன் அடிக்கவில்லை.
பெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மந்தீப் சிங் 25 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து பிரவீண் தொகாடியா விலகல்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து பணியாற்றி வந்த பிரவீண் தொகாடியா அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக பிரவீண் தொகாடியா பணியாற்றிவந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில், அவரின் ஆதரவாளர் தோல்வியுற்றதால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
விஎச்பி அமைப்பின் சர்வதேச தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரவீண் தொகாடியா தனது தீவிர ஆதரவாளரான ராகவ் ரெட்டியை நிறுத்தினார். இவருக்குப் போட்டியாக இமாச்சலப்பிரதேச முன்னாள் ஆளுநரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.எஸ்.கோக்ஜே போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் 192 உறுப்பினர்கள் வாக்களித்ததில், 131வாக்குகள் பெற்று கே.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார்.
61 வாக்குகள் மட்டுமே ராகவ் ரெட்டி தோல்வி அடைந்தார். இதையடுத்து, தானும், தனது ஆதரவாளர் ரெட்டியும் விஎச்பி அமைப்பில் இருந்து விலகுவதாக பிரவீண் தொகாடியா அதிரடியாக அறிவித்தார்.
விஎச்பி அமைப்பின் செயல்தலைவராக அலோக் குமாரும், துணைத் தலைவராக சம்பத் ராயும் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை : போர் கப்பல்களை காண குவிந்த மக்கள்
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இனிதே நிறைவு பெற்றன
RANK | COUNTRY | GOLD | SILVER | BRONZE | TOTAL |
---|---|---|---|---|---|
3 | 26 | 20 | 20 | 66 | |
1 | 80 | 59 | 59 | 198 | |
2 | 45 | 45 | 46 | 136 | |
4 | 15 | 40 | 27 | 82 | |
5 | 15 | 16 | 15 | 46 | |
6 |