ரசிகர்களை 2 மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு ரஜினி காந்த் மௌனத்தையே பதிலாக அளித்தார். எனினும் ரசிகர்கள் தீபாவளி, பொங்கல், ரஜினி பிறந்தநாள் ஆகிய தினங்களில் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிவர்.
இதனிடையே ரஜினியின் 164- ஆவது படமான காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 10 நாள்கள் மும்பை தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்னும் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பேன். வரும் 24-ஆம் தேதி காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன என்றார் அவர்.
மேலும் அரசியல் பிரவேசம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அதை சிரித்தபடியே தவிர்த்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.