மத்திய அமைச்சரவையிலிருந்து 5 பேர் நீக்கம்
மத்திய அமைச்சரவையில் 19 பேரை புதிதாக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து 5 இணையமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பரிந்துரையை தொடர்ந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.01. பஞ்சாயத்து துறை இணையமைச்சராக இருந்த நிகல்சந்த் மேகாவால். இவர் ராஜஸ்தான் மாநிலம் காங்காநகர் தொகுதியிலிருந்து தேர்வானவர். இவர் மீது கற்பழிப்பு புகார் உள்ளது.02. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக இருந்த ராம் சங்கர் கதாரியா. இவர் உ.பி., மாநிலம் ஆக்ரா தொகுதியிலிருந்து தேர்வானவர்.03. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வர்லால் ஜாட், இவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர்.04. மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சராக இருந்த மனுசுக்பாய் டி வாசவா. இவர் குஜராத் மாநிலம் நர்மதா தொகுதியிலிருந்து தேர்வானவர்05. விவசாயத்துறை இணையமைச்சர் எம்.கே.குந்தாரியா. இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியிலிருந்து தேர்வானவர்.